+2விடுபட்ட மாணவர்களுக்கு இன்று தேர்வு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் விடுபட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு தேர்வு இன்று நடைபெறுகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 24ம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு, ஏற்கனவே அறிவித்தபடி இன்று மறுவாய்ப்பு தேர்வு நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதும் 289 தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்வை 743 மாணவர்கள் எழுத உள்ளதாகவும், சென்னையில் மட்டும் 20 மையங்களில் 101 மாணவர்கள் தேர்வெழுத உள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அவர்களுள் பெரும்பாலானோர் தனித்தேர்வர்கள் என்றும், அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post