பிளஸ் 2 பாடங்கள் தயார் கல்வித்தொலைக்காட்சி மாணவர்களுக்காக

பள்ளிகளை திறக்க, கால தாமதம் 

பள்ளிகளை திறக்க, கால தாமதம் ஏற்பட்டு உள்ளதால்,அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாக,பாடங்களை ஒளிபரப்ப, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.கொரோனா பிரச்னையால், பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தாமதமாகிறது.

செப்டம்பரில் 

பள்ளிகளை திறக்க முடியுமா என்பதே, கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக பாடங்களை நடத்தி வருகின்றன. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, முதற் கட்டமாக, 

கல்வி தொலைக்காட்சி


கல்வி தொலைக்காட்சி வழியே பாடங்களை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான படப்பிடிப்புகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., வழியே மேற்கொள்ளப்படுகின்றன.

இன்னும் இரண்டு வாரங்களுக்குள், முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து, கல்வி தொலைக்காட்சியில், பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்பட உள்ளன.இதையடுத்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
#kalvi_tv #kalvi_tv_12th

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post