அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: உயர் கல்வித்துறை திட்டம்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: உயர் கல்வித்துறை திட்டம்.


தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் வழியில் நடத்த தமிழக உயர் கல்வித்துறைதிட்டமிட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊடரங்கினால் தேர்வு, மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு, பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பு என கல்வி தொடர்பான பல்வேறு விஷயங்கள் தடைப்பட்டு நிற்கின்றன. 

அனைத்தும் சீராகி இயல்புநிலை திரும்பும் நாளை எதிர்பார்த்திருந்தாலும் தற்போதைய சூழலை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கலை அறிவியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன்வழியில் மாணவர் சேர்க்கை கூடிய விரைவில் தொடங்கப்பட இருப்பதாக உயர்கல்வி துறை அதிகார வட்டம் தெரிவித்துள்ளது.

கல்வித்துறை திட்டம்

ஏற்கெனவே கடந்த ஆண்டு இதே திட்டத்தை அமல்படுத்த தமிழக உயர் கல்வித்துறை முயன்றது. ஆனால், கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் ஏராளமான பாடப் பிரிவுகளை முறைப்படுத்துவது, மாணவர் விடுதி வசதிகளைச் சீரமைப்பது உள்ளிட்ட பல சிக்கல்களைக் கையாள வேண்டிய நிர்பந்தத்தினால் ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை திட்டமானது கைவிடப்பட்டது.தற்போது கரோனா சூழல் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான காலகட்டத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஆகையால் சோதனை முயற்சியாக இந்தக் கல்வி ஆண்டில் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்லைனிலேயே நடத்தலாம் என்று உயர் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 

இதற்கான மென்பொருளைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்வடிவமைத்துள்ளது. கூடவே கல்லூரிகள் மற்றும் அவற்றில் வழங்கப்படும் பாடப் பிரிவுகள், மாணவருக்கான இடங்கள், விடுதி வசதி, ஆய்வுக்கூடம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்த விவரம் அடங்கிய கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் பொறியியல் கல்லூரிக

கடினம்:கல்வியாளர்கள் கருத்து

ளுக்கு நடத்துவது போல கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் வழியில் அதுவும் ஒற்றைச்சாளர முறையில் நடத்துவது கடினம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post