> காமராஜர் பற்றிய கவிதைகள்.. ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

காமராஜர் பற்றிய கவிதைகள்..

காமராஜர்  பற்றிய கவிதைகள்..


ஏழைகளின் கல்விக் கனவு

விடியும் முன்னே பலிக்கிறது

கற்கண்டாய் இனிக்கிறது - உன்

கல்வித்திட்டம்.

ஆரவாரம் கொள்கிறது

மதிய உணவுத் திட்டம்.


மக்களுக்கு மகுடம் சுட்டி

படிக்காத மேதையாக

பண்பாளன் நீ ஆட்சி செலுத்த

எளிமையும் நேர்மையும்

எட்டிப் பிடித்து

உன் தோளில் தொற்றிக் கொண்டது.

உன் இரு தோளிலும்

உயிர்த் தோழனாயாய் அமர

நேர்மைக்கும் எளிமைக்கும்

வாய்ப்பு கொடுத்தாய்!


இறக்கும் வரை

இறங்க வில்லை - அவைகள்

உன் தோளை விட்டு!


இறக்கும் வரை

இறங்க வில்லை - அவைகள்

உன் தோளை விட்டு!


உனது எளிமையும் நேர்மையும்

ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது

பள்ளி கல்லூரி பொது இடங்களில்

உருவச் சிலையாய்!


உன் சிந்தனையில் உதித்து

உயிர் பெற்று

கம்பீரமாய் காட்சி தருகிறது

பல தொழிற்சாலைகளும்

பல அணைக்கட்டுக்களும்!

நீ செய்த சாதனைகளால்

உன் உருவச்சிலை

உயிர் பெற்று நிற்கிறது

பட்டி தொட்டி எல்லாம்!


மண்ணில் பிறந்து

மனதை விட்டு நீங்காமல்

சரித்திரம் படைத்த கர்ம வீரரே !

கிங் மேக்கரே!

ஏழைகளுக்கு உதவுவதில் வள்ளலே!

இந்தியாவின் மற்றுமொரு அண்ணலே!


பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


Share:

0 Comments:

إرسال تعليق

📣 Join WhatsApp Channel