> 10th,11th Supplementary Exam Result 2025 | Re Exam Result ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10th,11th Supplementary Exam Result 2025 | Re Exam Result

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6

ஜூலை 2025 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) துணைத்தேர்வு

தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Mark Certificate) / மதிப்பெண் பட்டியலாக (Statement of Mark Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் செய்திக்குறிப்பு

I. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்:

ஜூலை 2025, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு (+1) துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் 31.07.2025 (வியாழக் கிழமை) பிற்பகல் 2.30 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று "RESULT" என்ற வாசகத்தை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் "SSLC / HR SEC FIRST YEAR SUPPLEMENTARY EXAM, JULY-2025 PROVISIONAL CERTIFICATE DOWNLOAD" வாசகத்தினை Click செய்து தேர்வர்கள் தங்களது தேர்வெண் (Roll No.) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து, தங்களது தேர்வு முடிவினை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

II. விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் "NOTIFICATION & SSLC Examination / Higher Secondary Examination" என்ற வாசகத்தை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் "SSLC / Hr Sec First Year Supplementary Examination, JULY-2025 SCAN COPY APPLICATION" வாசகத்தினை Click செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, 04.08.2025 (திங்கட்கிழமை) காலை 11.00 மணி முதல் 05.08.2025 (செவ்வாய் கிழமை) மாலை 5.00 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் (Scan Copy) பெறுவதற்கான கட்டணம் ரூ.275/- ஆகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கவுள்ள அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக முகவரியை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Press Release என்பதை Click செய்து அறிந்து கொள்ளலாம்.

தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்த வேண்டும்.

Share:

0 Comments:

إرسال تعليق

📣 Join WhatsApp Channel