> 12th இயல் 1 – Book Back Answers ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th இயல் 1 – Book Back Answers

12th இயல் 1 – Book Back  Answers 

இலக்கணத் தேர்ச்சிகொள்

1. பிழையான தொடரைக் கண்டறிக.

அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.

ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.

இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

2. பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க.

அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.

ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.

3. முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்க.

g

4. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?

g

நம்மை அளப்போம்

பலவுள் தெரிக.

1. ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்

அ) பௌத்தமும் தமிழும்         இ) சமணமும் தமிழும்

ஆ) இசுலாமும் தமிழும் ஈ) கிறித்துவமும் தமிழும்

2. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் என்பது

1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது

2) பொதிகையில் தோன்றியது

3) வள்ளல்களைத் தந்தது

அ) 1 மட்டும் சரி ஆ) 1, 2 இரண்டும் சரி

இ) 3 மட்டும் சரி ஈ) 1, 3 இரண்டும் சரி

3. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ்!" - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயங்களைத் தேர்க.

அ) அடிமோனை, அடிஎதுகை ஆ) சீர்மோனை, சீர்எதுகை

இ) அடிஎதுகை, சீர்மோனை ஈ) சீர்எதுகை, அடிமோனை

4. "செம்பரிதி..." எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு

அ) அற்புதக் கவிதை ஆ) நிலவுப்பூ 

இ) சர்ப்பயாகம் ஈ) சூரியநிழல்

5. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு

அ) மத்த விலாசம் ஆ) தமிழ்நாட்டு வரலாறு

இ) அஞ்சிறைத் தும்பி ஈ ) திசை எட்டும் 

குறுவினா

1. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.

  • அழகுக் கலைகள் பற்றி தமிழில் வெளிவந்த முழுமையான நூல்.
  • தமிழ்ச்சமுதாயம் தனது பழைய அழகுக் கலைச் செல்வங்களை மறந்து, தன் பெருமை  அறியாச் சமூகமாக இருந்த நிலைகண்டு, மயிலை சீனி. வேங்கடசாமி இந்நூலை எழுதினார்.

2. "விரிபெரு தமிழர் மேன்மை

ஓங்கிடச் செய்வ தொன்றே

உயிர்ப்பணியாக் கொண்டோன்" – யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?

  • இவ்வடிகள், மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிப் பாவேந்தர் பாரதிதாசன் கூறியது. 
  • தமிழ்ப் பண்பாட்டிலும், தமிழர் வரலாற்றிலும் தனித்தன்மைகளை ஆய்வு செய்து ஆவணங்களை தொகுத்தளிக்கும் பணியை மேற்கொண்டதால் சீனி. வேங்கடசாமியை இவ்வாறு பாரதிதாசன் பாராட்டுகிறார்.

3. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

  • உழைப்பில் சிவந்த கைகளை உடைய தொழிலாளர், அவர்தம் தோள்மீதில் முத்துமுத்தாக வீற்றிருக்கும் வியர்வைத் 
  • துளிகள் ஆகியவற்றைப்பற்றி வியந்துபாடத் தமிழின் துணைவேண்டும் எனக் கவிஞர் சிற்பி கூறுகிறார்

4. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கே அமைத்து ஒரு தொடர் எழுதுக.

  • காலை விடியலின் வனப்பு கண்களைக் கவரும். 

சிறுவினா

1. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.

  • கி. பி-. 3முதல் 9வரை ஆட்சிபுரிந்த மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன் ஆகியோர் வரலாறுகளை எழுதினார். 
  • மூவேந்தர்கள், கொங்கு நாட்டு மன்னர்கள், துளுநாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை மட்டும் எழுதாது, 
  • அக்கால அரசியல், பண்பாடு மற்றும் கலை வரலாறுகளையும் பதிவு செய்து, ஆய்வு நூல்களை எழுதினார்.

2. "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்" - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

  • செங்கதிர்களைப் பரப்பும் மாலை நேரத்துச் சூரியன், மேற்கில் மலைமேட்டின்மேல் தலையைச்  சாய்ப்பான். அவ்வேளையில், அந்தி நேரத்தில் வானம் முழுவதும் செந்நிறம் பரவும். 
  • அதே வேளையில், விண்ணில் மீன்கள் கண் சிமிட்டும். இக்காட்சி, நாளும் நடைபெறும். 
  • இதனைக் கண்டு சுவைத்த கவிஞர், நயமான சொற்களைக் கொண்டு, கவிதை பாடியுள்ளார். 
  • இந்த வரிகளைப் படிக்கின்றபோதே, மனக் கண்ணால் இக்காட்சியைக் கண்டு படித்து மகிழ முடிகிறது.

3. "ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம் : 

தண்டி அலங்காரம் உரைமேற்கோள் பாடலில் இடம்பெற்றுள்ளது.

பொருள் : 

 “ஒலிக்கும் அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தில் இருள் போக்கும்” என்பது பொருள்.

விளக்கம் : 

சூரியன், தன் கதிர்களால் உலகில் பரவியுள்ள புற இருளைப் போக்கும்;

 தமிழோ, மக்களின் அக இருளைப்போக்கி, அறியாமையை அகற்றும் சிறப்புடையது என்பதாம்.

4. பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே.

-நன்னூல்.

மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு

மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!

-சிற்பி பாலசுப்பிரமணியம்

  • “பழையனவாகிவிட்ட சில நடைமுறைகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதும், புதியன வாகிய சில நடைமுறைகள் பயன்பாட்டில் சேர்க்கப் படுவதும் குற்றம் ஆகாது; காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை ஏற்றுக்கொள்வது கட்டாய மாகும்” என்பது, நன்னூல் பாடலால் பெறப்படும் செய்தி. 
  • “அந்தப் பழமை நலத்தை மீண்டும் புதுக்குதற்கு, உடல் சிலிர்த்து எழுமாறு தமிழ்க்குயில் கூவி வரவேண்டும்” என்பது, இளந்தமிழே பாடலின் இலக்கியச் சாரம். 
  • பழமை எல்லாம் தேவையற்றவை என்று ஒதுக்கி விடவும் கூடாது. பழமையானவற்றுள்ளும் நலம் பயக்கும் பல செய்திகள் இருக்கலாம். பழமையைப் புதுக்குவதன்மூலம், சமுதாயம் மறுமலர்ச்சி பெறத் தமிழ் உதவ வேண்டும் என்பது கருத்து

நெடுவினா

1. மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்பதனைச் சான்றுகளுடன் நிறுவுக.

மயிலை சீனி. வேங்கடசாமி தொடக்ககால ஆய்வுகள் :

‘கிறித்தவமும் தமிழும்’ என்னும் நூல், மயிலை சீனி. வேங்கடசாமியின் முதல் ஆய்வு நூலாகும். 

சமயக் காழ்ப்புணர்வு இன்றிப் ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களையும் இயற்றினார். வட்டெழுத்து, கோலெழுத்து, பிராமி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்தார். அதனால் கல்வெட்டுச் சாசனங்களை எளிதாக வாசித்து, 19ஆம் நூற்றாண்டு மன்னர்கள் குறித்துத் தொடர்ந்து எழுதினார். களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்துடன், ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூலை வெளியிட்டார்-.

கலை, கல்வெட்டு ஆய்வுகள் :

ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்தார். பல்லவர், சோழர்கால ஓவியங்கள், சித்தன்னவாசல் ஓவியங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். கட்டடம், சிற்பம், ஓவியம் குறித்த ஆய்வுகளைச் செய்ததால், ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்னும் கவின்கலை நூல்களை எழுதினார். இதுவே, தமிழில் முதன்முதலாக வெளிவந்த கவின் நூலாகும். இந்நூல், தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியன எழுதியதோடு, நுண்கலைகளுக்கு உரிய படங்களையும் தாமே வரைந்து வெளியிட்டார். இது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும். தொல்காப்பியம், சங்க இலக்கியம், கல்வெட்டு ஆகியவற்றை ஆய்வு செய்து, நூல்களை எழுதினார். ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூல், தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டு உருவாக்கம் செய்தது எனக் கூறலாம்.

பன்மொழிப் புலமை :

மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் எனப்பல மொழிகளில் பயிற்சியுடையவர். தமிழகத்தின் வரலாற்றை அடையாளப்படுத்தியவர். இவருடைய ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன்மையான 

ஆய்வாகும். மதுரைப் பல்கலைக்கழகம், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்றும், அறிஞர் பெருமக்கள், ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்றும் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தனர்-. தமது ஆய்வால் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் உரிய சுய அடையாளங்களை மீட்டுத் தந்தவர் ஆவார்

2. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

மொழிப்பற்று :

“தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதையே கடமையாகக் கொள்! 

புதியபுதிய சிந்தனைகள், புதியபுதிய உண்மைகள், புதியபுதிய இன்பங்கள் தமிழில் வளர்ந்துகொண்டே இருக்கவேண்டும். 

தமிழ், செழுமை அடைய வேண்டும்” என்னும் தம் விருப்பத்தை வேண்டுகோளாக வைக்கிறார். இங்கே பாரதியின் மொழிப்பற்று, விருப்பமாக வெளிப்படுகிறது.

சமூகப் பற்று :

பெண்ணுக்குச் சமவுரிமை வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

“தம்பி, ஆணும் பெண்ணும் ஓருயிர்; இரண்டு தலைகள். 

அவை ஒன்றுக்கொன்று தாழ்வில்லை! 

பெண்ணை அடிமை செய்வோன், தன் கண்ணைக் குத்திக்கொண்டவனாவான். 

பெண்ணை அடைத்து வைப்பவன், கண்ணை அடைத்தவனாவான் என்று எழுது” என வேண்டுகோள் விடுக்கிறார் பாரதி.

எழுதுக! பேசுக! :

“தமிழ்நாடு வாழ்க! தமிழ் நாட்டில் நோய்கள் தீர்க! 

தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிகள் பெருகுக! 

அந்தப் பள்ளிகளில் நவீன கலைகள் எல்லாம் பயிற்சி பெற்று வளர்க” என்று, நெல்லையப்பரை எழுதச் சொல்கிறார். 

“வணிகமும் இயந்திரங்களும் பெருகவேண்டும் எனப் பேசு! முயற்சிகள் ஓங்க வேண்டும். 

இசை, சிற்பம், இயந்திர நூல், வானநூல், இயற்கைநூலென ஆயிரம் ஆயிரமாய்ப் பெருகவேண்டும் என முழங்கு தம்பி” என்று, கட்டளை இடுவதன்மூலம் பாரதியின் சமூகப்பற்று, தெளிவாய் வெளிப்படுகிறது.

3. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

4. 'சொல்லோவியங்கள்' என்னும் கவிதை நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சிநிரலை உருவாக்கி, நன்றியுரை எழுதுக.

சான்றோர் சித்திரம்

மொழியை ஆள்வோம்

பர்மாவில் ரங்கூன் நகரில் உள்ள ஒரு கடையில் அடிப்பையனாகப் (உதவியாள்) பணியாற்றினான் ஒரு சிறுவன். அவனிடம், கடை முதலாளி ஒரு பெயரைக் குறிப்பிட்டு, அந்த நபர் வந்து தன்னை எங்கே என்று கேட்டால், 'முதலாளி இல்லை' என்று சொல்லுமாறு

வற்புறுத்தினார். அந்தச் சிறுவனோ, "நீங்கள் வெளியிலிருந்தால் அவ்வாறு கூறலாம். அப்படி இல்லாதபோது எப்படிப் பொய் சொல்வது? நான் சொல்ல மாட்டேன்" என்று பிடிவாதமாகக் கூறினார். அவர்தாம் வ.சுப.மாணிக்கம்.

'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற கொள்கையில் 'தமிழ்வழிக் கல்வி இயக்கம்.என்னும் அமைப்பை நிறுவியவர்; தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர்; மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழ்மொழியில் அமைவதற்கு ஆணை பிறப்பித்தவர்; அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தவர் வ.சுப.மாணிக்கம்.

சங்கப் பாடல்களின் நுட்பங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் சிறந்தவர். தமிழ்க்காதல்,வள்ளுவம், கம்பர், சங்கநெறி உள்ளிட்ட பல நூல்களையும் இயற்றியவர். கட்டுரை, நாடகம், கவிதை,உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமையாக விளங்கியவர். அவருடைய மறைவிற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு 'திருவள்ளுவர் விருது' வழங்கியது; 2006ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கிச் சிறப்பித்தது.

அவருடைய தமிழ்த்திறத்துக்கு ஒரு பதம்.

"ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் விற்பதற்கு மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்" 

இரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.

தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள். எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய்மொழியே துணைநிற்கும் – இதனை வலியுறுத்திப் பின்வரும் குறிப்புகளைக்கொண்டு கட்டுரை எழுதுக.

தாய்மொழிக் கல்வியின் தேவை - தாய்மொழிச் சிந்தனை - அறிஞர்களின் பார்வை - கற்கும் திறன்-பயன் - இன்றைய நிலை

தமிழாக்கம் தருக.

1. Learning is a treasure that will follow its owner everywhere.

கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

2. A new language is a new life.

புதிய மொழி புதிய வாழ்க்கை .

3. If you want people to understand you, speak their language.

4. Knowledge of languages is the doorway to wisdom.

5. The limits of my language are the limits of my world.

இலக்கிய நயம் பாராட்டுக.

முச்சங்கங் கூட்டி

    முதுபுலவர் தமைக் கூட்டி

அச்சங்கத் துள்ளே

    அளப்பரிய பொருள்கூட்டி

சுவைமிகுந்த கவிகூட்டி

    சொற்சங்க மாகச்

அற்புதங்க ளெல்லாம்

    அமைத்த பெருமாட்டி!

-கண்ணதாசன்.

கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை

வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது.பெற்ற தாயின் முதல் வேட்கைதன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே. மொழி வரலாறு (மு. வரதராசனார்) 

உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.

தாமரை இலை நீர்போல, 

கிணற்றுத்தவளைபோல, 

எலியும் பூனையும்போல, 

அச்சாணி இல்லாத தேர்போல, 

உள்ளங்கை நெல்லிக்கனிபோல.

எண்ணங்களை எழுத்தாக்குக.

மொழியோடு விளையாடு

குறிப்புகளில் மறைந்திருக்கும்தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்.

எ.கா. கவிஞர்; ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம் -( விடை: கவிமணி. ) 

1. தமிழறிஞர்; முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம். ( விடை: மறைமலை அடிகள்  ) 

2. தாய்மொழி; ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும். ( விடை: தமிழ் ஒளி )

3. சிறுகதை ஆசிரியர்; முதல் பாதி நவீனம். ( விடை: புதுமைப்பித்தன் )

4. முன்னெழுத்து அரசன்; பின்னெழுத்து தமிழ் மாதம். ( விடை: கோதை )

(தமிழ் ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன்,

மறைமலை அடிகள்)

கதையைத் தொடர்ந்து நிறைவு செய்க.

வேப்பமரத்தால் ஆன மரப்பாச்சி பொம்மை ஒன்று என் வீட்டில் நெடுங்காலமாக இருந்தது.

மிகுந்த அன்போடு அதற்கு என் பெயரை வைத்திருந்தேன். எத்தனையோ வாசனைகளை அதன்மீது பூசினேன். ஆனாலும் அந்தக் கசப்பின் வாசம் போகவில்லை. இரவில் அதன் மெல்லிய விம்மல் ஓசை கேட்கும்...

படிப்போம்; பயன்படுத்துவோம்!

Anthropology - மானுடவியல்

Archaelogy - தொல்லியல்

Research - ஆராய்ச்சி

Fine Arts - கவின்கலைகள்

Field Study - கள ஆய்வு

Epigraphy - கல்வெட்டியல்

Share:

0 Comments:

إرسال تعليق